புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
கேரளா திருச்சூரைச்சேர்ந்த ஹெலன்தான் நடிகை ஓவியா. களவாணி படத்துக்காக மலையாள படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த அவரை தமிழுக்கு கொண்டு வந்து கதாநாயகி ஆக்கினார் டைரக்டர் சற்குணம்.. ஆனால் களவாணி படம் மெகா ஹிட்டானபோதும் அதன்பிறகு சரியான படங்களை தேர்வு செய்யத் தெரியாமல் சில படங்களில் கமிட்டானார் ஓவியா. அந்த படங்கள் திரைக்கு வராமல் போனதோடு ஓவியாவின் மார்க்கெட்டை கவிழ்த்து விட்டன.
இருப்பினும் தொடர்ந்து போராடிய ஓவியா, சுந்தர்.சியின. கலகலப்பு படத்தில் அயிட்டம் நடிகை போன்று அஞ்சலியுடன் இணைந்து கவர்ச்சிக்கோதாவில் குதித்தார். அதிலிருந்து அவ்வப்போது ஒரு படத்தில் நடித்தபடி தனது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு வருகிறார். தற்போது சீனி, சண்டமாருதம் ஆகிய படங்களில நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பாரதிராஜா தயாரிப்பில், அகத்தியன் இயக்கி வரும் படத்திலும் ஒரு வேடத்தில் நடிக்க கமிட்டானார் ஓவியா. ஆனால், அந்த படத்தின் நாயகியாக டைரக்டர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமியே பின்னர் ஒப்பந்தம் ஆனதால் அதிர்ச்சியாகி விட்டாராம் ஓவியா. மற்ற நடிகைகள் ஹீரோயின் என்றாலும தனக்கு ஓரளவு நடிக்க சான்ஸ் தருவார்கள். ஆனால் இப்போது டைரக்டரின் மகளே கதாநாயகி என்கிறபோது நமக்கு நடிக்க காட்சிகளே இருக்காது. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டை போன்று தன்னை ஓரங்கட்டி விடுவார்கள் எனறு உஷாராகி விட்ட ஓவியா, இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர் பின்னர் அப்படத்திலிருந்தே விலகி விட்டாராம். அதனால் ஓவியா கேரக்டருக்கு வேறு நடிகை தேடி வருகிறார்கள்.