இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் ஹிருத்திக் ரோஷனின் நடிப்பில் நவம்பரில் வெளியாக இருக்கும் படம் பேங் பேங். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம். இந்நிலையில் இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக ஹிருத்திக், மொகஞ்சதரோ படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் சுமார் ரூ.50 கோடியாம். அப்படி அவருக்கு ரூ.50 கோடி கொடுக்கும் பட்சத்தில், இந்தியில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஹிருத்திக் ரோஷனும் இணைந்து விடுவார். ஏற்கனவே இந்தப்பட்டியலில் ஷாரூக், அமீர், சல்மான் ஆகியோர் உள்ளனர்.
இதுப்பற்றி ஹிருத்திக் ரோஷனிடம் கேட்டால், என் படத்தின் லாபங்களை பொறுத்து நான் சம்பளம் நிர்ணயிக்கிறேன், அது எனது தொழில் சம்பந்தப்பட்ட விஷயம் என்கிறார்.
இதனிடையே பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகர், சல்மான் கான் மற்றும் அமீர் கானுக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் தர முன்வந்துள்ளது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் கரண் ஜோகர். ஆனால் இதுப்பற்றி அமீரும், சல்மானும் வாய்திறக்காமல் அமைதியாக இருக்கின்றனர்.