'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தொடர் தோல்விகளுக்கு பிறகு, கார்த்தி மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ''மெட்ராஸ்''. 'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கத்தில், கார்த்தி-கத்ரீனா தெரஸா நடித்துள்ள மெட்ராஸ் படம், வடசென்னையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது. தற்போது இந்தப்படம் இப்போது ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. இந்நிலையில், ''மெட்ராஸ்'' படத்திற்கு தடைகோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாலசுப்ரமணியம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நான், ''கருப்பர்கள் நகரம்'' என்ற படத்தை எடுத்து வருகிறேன். இப்படம் பாதி முடிவடைந்துள்ளது. இதனிடையே கார்த்தி நடித்துள்ள மெட்ராஸ் படத்தின் கதை எனது கதையை போன்று உள்ளது. எனது கதையை திருடி மெட்ராஸ் படத்தை எடுத்துள்ளனர். எனவே இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், அக்டோபர் 22ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி, வழக்கை ஒத்தி வைத்தார்.
இந்தப்படத்தின் மூலமாவது ஒரு வெற்றியை தக்க வைத்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்த கார்த்திக்கு, படம் ரிலீஸாகும் முன்பே ஏற்பட்டு இருக்கும் சிக்கல் கவலையை அளித்துள்ளது.