'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
கனா காணும் காலங்கள் தொடர் மூலம் அறிமுகமானவர் ப்ரியா. அதன் பிறகு பல சீரியல்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஹீரோக்களின் தங்கையாக நடித்தார். ப்ரியாவுக்கும், ராஜா ராணி படத்தின் இயக்குனர் அட்லீக்கும் வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் ப்ரியா.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: "அட்லி குடும்பமும், எங்கள் குடும்பமும் பேமிலி பிரண்ட். அட்லியை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். நல்ல பிரண்டாத்தான் இருந்தார். எங்களுக்குள் லவ் எதுவும் இல்லை. ஒரு நாள் எனக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்க்குறாங்கன்னு சொன்னேன். என் ஜாதகத்தை தரட்டுமான்னு டக்குன்னு கேட்டுட்டார். அதுக்கு பிறகு இரண்டு குடும்பத்தாரும் பேசி கல்யாணத்தை முடிவு பண்ணினாங்க. இது அரேன்ஞ்சுடு மேரேஜ்தான். இப்பதான் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்.
நடிப்பு எனக்கு பேஷனோ, தொழிலோ இல்லை. வாய்ப்புகள் கிடைச்சுது சும்மா ஒரு ஹாபிக்காக நடித்தேன். நிச்சயமாக கல்யாணத்துக்கு பிறகு நடிக்க மாட்டேன். இது நானே எடுத்த முடிவு" என்கிறார் ப்ரியா.