தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஐ படத்தில் வடசென்னை வாலிபர், மிஸ்டர் மெட்ராஸ், மாடல் என மூன்று கெட்டப்பில் நடித்திருக்கிறார் விக்ரம். அந்தவகையில், ஒரு மாடலின் வாழ்க்கையை மையப்படுத்தி ஐ கதை உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசரைப் பார்த்த ரஜினி உள்பட அனைவருமே வியந்து அவரை பாராட்டியுள்ளனர். இதில் ரஜினி, நடிப்புக்காக தனது உடம்பை இந்த அளவுக்கு வருத்திக்கொள்ளும் ஒரு நடிகரை நான் இந்த உலகத்திலேயே பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த மாடல் கதையை ரஜினியிடம் எந்திரன் கதையை சொல்வதற்கு முன்பே ஷங்கர் சொன்னாராம். மாடலாக வர வேண்டும் என்று நினைக்கும் ஒருவன், முன்னணி மாடலாக வருவது போன்று சித்தரிக்கப்பட்ட அந்த கதையை கேட்ட ரஜினி, கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நானெலலாம் மாடலாக நடித்தால் சரி வராது என்று சொல்லி அப்போது நடிக்க மறுத்து விட்டாராம்.
அதன் பிறகு தான் எந்திரன் கதையை சொன்னாராம் ஷங்கர். இதை ஐ பட விழாவின்போது சொன்ன ரஜினி, இப்போது விக்ரம் இந்த படத்தில் நடித்திருந்தாலும், முன்பே ஷங்கர் என்னிடம் அந்த கதையை சொன்னபோது நான் ஓ.கே சொல்லியிருந்தால் நான்தான் இந்த கதையில் நடித்திருப்பேன். ஆக, 5 வருடத்திற்கு முன்பே இந்த கதையை ஷங்கர் ரெடி பண்ணி விட்டார் என்றார் ரஜினி.