மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
டிஜிட்டல் சினிமா வந்த பிறகு சினிமா எடுப்பது மிகவும் எளிமையாகிவிட்டது. எதையாவது புதுமையாக செய்து மக்களை கவர வேண்டும் என்று நினைக்கிறார்கள். புதுகை மாரிசா என்பவர் 12 மணி நேரத்தில் ஒரு படத்தை எடுத்து சாதனை படைக்க நினைக்கிறார். படத்தின் பெயர் நடுஇரவு. புதுமுகங்கள் நடிக்கிறார்கள், உலக நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், ரமேஷ் கிருஷ்ணா இசை அமைக்கிறார். இந்த படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் தொடங்கி வைத்தார்.
தனது புதிய முயற்சி பற்றி இயக்குனர் புதுகை மாரிசா கூறியதாவது: பல வருடங்காக திட்டமிட்டு இந்த முயற்சியை செய்கிறேன். வருகிற 19ந் தேதி இந்த படப்பிடிப்பு நடக்கிறது. மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு தொடங்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்திற்குள் படப்பிடிப்பை முடிக்கிறோம். இதற்கான ஏற்பாடுகள் பக்காவாக இருக்கிறது. மோனிகா என்ற சிறுமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நடிப்பவர்கள் அனைவருக்குமே ஒத்திகையும், பயிற்சியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு திகில் கதை என்பதால் இரவிலேயே படத்தை எடுத்து முடித்து விடுகிறோம். என்றார்.