இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம், தற்போது தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருகிறது. அவள் ஒரு மின்சாரம், மனதில் உறுதி வேண்டும், வைராக்கியம், உறவுக்கு கை கொடுப்போம், சம்சாரம், சவாலே சமாளி, வைர நெஞ்சம் சீரியல்களுக்கு பிறகு இப்போது புதிதாக தயாரிக்கும் சீரியல் மோகினி.
இதில் ராஜா, பெரோஸ்கான், சரத்குமார், சஞ்சய் குமார், சிவரஞ்சனி, ஸ்ரீப்ரியா, சுஜாதா, யமுனா நடிக்கிறார்கள். வைரமுத்து டைட்டில் பாடலை எழுதியுள்ளார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். ரமணி பரத்வாஜ் இசை அமைக்கிறார். ஆர்.கே.பி. இயக்குகிறார். ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் ஏ.வி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன் தயாரிக்கிறார்கள்.
"இது வழக்கமான நெடுந்தொடர்களிலிருந்து வித்தியாசமானது. அழுது வடியும் கேரக்டர்கள் இல்லாமல் கதைக்கும் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பெற்றவர்களின் விருப்பத்துக்காக காதலித்தவனை கைவிட்டுவிட்டு அவனது நண்பனை மணந்து கொள்ளும் மோகினி முதலிரவில் ஒரு அதிர்ச்சியை எதிர்கொள்கிறாள். அதன் பிறகு அவள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது" என்று ஏவிஎம் நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.