‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ள, ஐ படத்தின் ஆடியோ விழா இன்று மாலை சென்னையில் நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கலந்து கொள்ள உள்ளார். ஆடியோ விழாவில் கலந்து கொள்ள ஓகே சொன்ன உடனேயே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி கேள்விப்பட்ட அர்னால்ட் அவரை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார். அர்னால்ட்டை, சந்திக்க முதல்வரும் அனுமதி அளித்திருந்தார். இதனையடுத்து, இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்த அர்னால்ட், பகல் 2.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதாவை, தலைமை செயலகத்தில் சென்று சந்தித்தார். சுமார் அரைமணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது.
முதல்வரை சந்தித்தது பற்றி அர்னால்டு கூறியதாவது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தமிழகத்தில் அவர் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பாராட்டத்தக்கது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக கல்வி, தொழில் போன்றவை இருக்கிறது. மிகச்சிறந்த தலைவியாக அவர் செயல்படுகிறது, அவரை சந்தித்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.