ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2003ல் டைரக்டர் சரண் இயக்கிய ஜே ஜே படத்தில் அறிமுகமானவர் பூஜா. அதையடுத்து அட்டகாசம், உள்ளம் கேட்குமே, பட்டியல் என வரிசையாக நடித்த பூஜா, பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் கண் பார்வையில்லாத பெண்ணாக நடித்திருந்தார். அவரது நடிப்பும் பேசப்பட்டது.
இருப்பினும், அதன்பிறகு தமிழில் சரியான படங்கள் இல்லாததால் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு விடியும்முன், கடவுள் பாதி மிருகம் பாதி ஆகிய படங்கள் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் ஏதாவது பரபரப்பு ஏற்படுத்தி கோலிவுட்டின் கவனத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக, சில மேடைகளில் நடிகர் ஆர்யா, டைரக்டர் பாலா ஆகியோருக்கு முத்தம் கொடுத்து அதை மீடியாக்களில் ப்ளாஷ் செய்ய வைத்தார்.
மீண்டும் பூஜா நடிக்க வந்திருக்கும் செய்தி பரவி விட்டபோதும், அவருக்கு யாருமே சான்ஸ் கொடுக்க முன்வரவில்லை. அதனால் தற்போது சசிகுமார்- வரலட்சுமி நடிப்பில் தாரைதப்பட்டை படத்தை டைரக்டர் பாலா இயக்கி வருவதால், அந்த படத்தில் தனக்கு ஏதாவது கேரக்டர் கொடுக்குமாறு அவரை துரத்தி வருகிறாராம் பூஜா. ஆனால் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும்போதே படத்தின் கேரக்டர்களை முடிவு செய்து விடும் பாலா இன்னமும் அவருக்கு சாதகமான பதிலை சொல்லவில்லையாம்.