தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அமரகாவியம் படத்தை பற்றி இரண்டு தரப்பான விமர்சனங்கள் வந்தபோதும் ஹீரோயின் மியாவின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. அதுவும் குறிப்பாக கிளைமாக்சில் அவர் மரணத்தை நெருங்கும் நேரத்தில் வாழ ஆசைப்படும் அந்த முக உணர்வை காட்டிய விதம் மெய்சிலிர்க்க வைத்துவிடுகிறது.
அமரகாவியம் வெளியான அன்று தனது கல்லூரி தேர்வை எழுதிக் கொண்டிருந்தார் மியா. மியாவின் நடிப்புக்காக அவர் கல்லூரி பல சலுகைகளை வழங்கி இருக்கிறது. இதுபற்றி மியா கூறியிருப்பதாவது:
சொந்த ஊர் கோட்டையம் பக்கம் உள்ள பாலா. அங்குள்ள கல்லூரியில்தான் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். முதல் வகுப்பிலிருந்தே உள்ளூரில் படிப்பதால் என்னை எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டியுடன் நடித்து விட்டேன். தமிழில் அமரகாவியம் முதல் படம்.
எனது படங்களை எங்கள் கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் பார்த்து விடுவார்கள். தங்கள் கல்லூரி மாணவி நல்ல நடிகையாக இருப்பது அவர்களுக்கு சந்தோஷம். கல்லூரியில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. எப்பவேணாலும் கிளாஸ் போகலாம், வரலாம். எத்தனை நாள் வேணாலும் லீவு எடுத்துக்கலாம். ஆனா எக்ஸ்சாம்ல கண்டிப்பாக அட்டன் பண்ணனும். பாசும் பண்ணணும். இந்த இரண்டையும் நான் கரெக்டா செய்திடுவேன். அதான் அமரகாவியம் ரிலீசப்போ நான் தமிழ்நாட்டுக்கு வரமுடியாமல் எக்ஸாம் எழுதிக்கிட்டிருந்தேன்.
நான் காலேஜ் போகாத நாட்கள்ல என்ன நடந்துச்சுன்னு அந்த பாடத்தை பிரண்ட்சுங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குவேன். வீட்டில் இருந்தால் பாதி நேரம் படிப்புக்கு, பாதி நேரம் டான்சுக்குன்னு ஒதுக்கிடுவேன். நல்ல நடிகைன்னு பெயர் எடுத்த மாதிரி நல்ல டான்சர்னு பெயர் எடுக்க ஆசை என்கிறார் மியா.