ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வாரம் நடிகை ஸ்வேதா பாசு ஐதராபாத் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டார். ஸ்வேதா பாசு இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஒரு படத்திற்கு தேசிய விருதும் பெற்றவர். அதனால் அவரை பாலிவுட்டில் அனைவருக்கும் தெரியும். ஸ்வேதா பாசுக்கு ஆதரவாக இயக்குனர் ஹன்சல் மேத்தா, நடிகை அதிதி ராவ் ஆகியோர் கருத்து கூறியிருந்தனர். தற்போது தீபிகா படுகோனேவும் சுவேதாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். குடும்ப கஷ்டத்தை போக்க விபச்சாரத்தில் ஈடுபட்டால் தவறில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்குத்தான் சுவேதா அப்படிச் செய்துள்ளார். அது தவறில்லை. மக்கள் அவரை பற்றி தவறாக பேசுவது நியாயமற்றது. நிர்க்கதியற்ற நிலையில் ஒரு பெண்ணால் வேறு என்ன செய்ய முடியும்.
ஸ்வேதாவை குறை சொல்கிறவர்கள் அவரை அந்த குற்றத்தை நோக்கி தள்ளியவர்கள் பற்றி ஏன் பேசுவதில்லை. ஸ்வேதாவை எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தும் நான் உள்பட யாருமே அவருக்கு உதவி செய்ய வில்லையே. எனவே அவரைப் பற்றி தவறாக பேசுவதற்கு பதிலாக அவருக்கு உதவி செய்யுங்கள் என்கிறார் தீபிகா.