ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு "அளவுக்கு அதிகமான மருத்துவ பரிசோதனைகள் தேவையா? இல்லையா?" என்ற விவாதம் நடந்தது. இதற்கு டாக்டர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு விளக்கம் அளித்த நிகழ்ச்சியின் இயக்குனர் அந்தோணி கூறியிருப்பதாவது:
நீயா நானா நிகழ்ச்சி பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து வருகிறது. அதில் மக்களை நேரடியாக பாதிக்கும் மருத்துவமும், கல்வியும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அளவுக்கு அதிகமான மருத்துவ பரிசோதனைகள் தேவையா? என்ற கேள்வியை நீயா நானா நிகழ்ச்சி மட்டும் எழுப்பவில்லை. எய்ம்ஸ் மருத்துவர்கள் கேட்கிறார்கள். அவர்களது ஆய்வுகள் கேட்கிறது. அதன் அடிப்படையிலேயே நீயா நானாவில் விவாதிக்கப்பட்டது.
இந்திய மருத்துவத்துறை பொதுநல சுகாதாரத்தில் பல சாதனைகளை புரிந்துள்ளது. அதை யாரும் மறுக்கவில்லை. தனியார் மயமாக்கலுக்கு பிறகு மற்ற துறைகள் போலவே மருத்துவதுறை மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனை மீடியாக்கள் மட்டும் சொல்லவில்லை. டாக்டர்கள் சேதுராமன், ஜீவானந்தம், பல்ராம் பார்கவா, சமீரன் நந்தி போன்றவர்களே கேள்வி எழுப்பி வருகிறார்கள். அப்படி இருக்கும்போது இதுபோன்ற விவாதங்களுக்கு மருத்துவர்கள் எதிராக இருப்பது ஏன் என்று புரியவில்லை. என்கிறார் அந்தோணி.