தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதாபாசு, சினிமாவில் வருமானம் இல்லாததால் தான் அந்த தொழிலுக்கு தள்ளப்பட்டதாக கூறியிருந்தார். அதற்கு நடிகை குஷ்பு எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது, சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால் டி.வியில் நடிக்கலாம். இல்லையேல் வேறு ஏதாவது வேலை செய்து சம்பாதிக்கலாம். அதையெல்லாம் விட்டு விட்டு பாலியல் தொழிலுக்கு சென்றேன் என்று ஸ்வேதாபாசு கூறுவது தவறானது என்று தனது கருத்தை சொல்லியிருந்தார்.
ஆனால், இப்போது சீரியல்களில் நடித்து வரும் சாக்ஷி என்ற நடிகை ஸ்வேதாபாசுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், ஸ்வேதாபாசு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டபோது அவரது புகைப்படத்தை மட்டுமே போலீசார் வெளியிட்டனர். ஆனால், அவருடன் இருந்த அந்த தொழிலதிபரது பெயரையோ, போட்டோவையோ இதுவரை வெளியிடவில்லை. மேலும், ஸ்வேதாபாசுவை காப்பாகத்தில் வைத்திருப்பதாக கூறிய போலீசார், அவரது அம்மாவைகூட பார்ப்பதற்கு அனுமதிக்காதது வேதனையானது.
மேலும், ஸ்வேதாபாசுவை ஒரு கிரிமினல் போன்று களங்கப்படுத்துகிறார்கள். ஒரு கொலைகாரனுக்கு கொடுக்கும் உரிமையைகூட ஸ்வேதாவுக்கு கொடுக்கவில்லை என்றும் காவல்துறைக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்.