டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் டாப்சி, தற்போது அக்ஷ்ய் குமாருடன் பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார். அக்ஷ்ய் குமாரை தொடர்ந்து இப்போது இர்பான் கான் உடன் நடிக்க இருக்கிறார். ப்ரியா மிஸ்ரா இயக்கும் சுந்தர்காண்ட் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டாப்சி. உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மை காதல் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.
இதுகுறித்து டாப்சி கூறியுள்ளதாவது, பேபி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இந்தப்படத்திற்கு பிறகு சுந்தர்காண்ட் என்ற படத்தின் கதையை கேட்டேன். மிகவும் அற்புதமான கதை, இதுவரை இப்படி ஒரு கதையிலும், இப்படி ஒரு கதாபாத்திரத்திலும் நடித்தது இல்லை என்று கூறியுள்ளார்.
ப்ரியா மிஸ்ராவுக்கு இதுவே முதல்படம். ஏற்கனவே டிவி சேனலில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். தற்போது அவர் இயக்கி வரும் சுந்தர்காண்ட் படத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காதலிப்பது போன்ற கதை. வழக்கமான காதல் கதையாக இப்படம் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக உருவாகி வருகிறது.