பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
உலகின் பல்வேறு நாடுகளிலும் திரைப்பட திருவிழாக்கள் நடக்கிறது. தற்போது இந்தியாவிலும் திரைப்பட விழாக்கள் நடைபெற துவங்கியுள்ளன. இந்தியாவின் சர்வதேச மராத்தி திரைப்பட விருது விழா இந்தாண்டு, ஹாங்காங்கில் நடைபெற இருக்கிறது. பொதுவாக திரைப்பட விழாக்களோ அல்லது விருது வழங்கும் விழாக்களோ என்றால் அதில் கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் இருக்காது. அந்தவகையில், மராத்தி திரைப்பட விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த கலை நிகழ்ச்சிகளில் முக்கியமான சிறப்பு அம்சமே சந்தீப் சொபர்கார்-ஜெசி ரேன்தவா நடனம் தான்.
இந்தாண்டு இவர்கள் இருவரும் இணைந்து நடன நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். மராத்தி திரைப்பட விழாவில் துவக்க நாளில் இவர்களது நடனம் இடம்பெறுகிறது. வெஸ்டர்ன் மற்றும் இந்திய நடனங்களையும் சேர்த்து துவக்க விழாவில் நடனம் அமைக்க உள்ளனர். தற்போதே இருவரும் அதற்கான பயிற்சியில் இறங்கிவிட்டனர்.
ஐ.எம்.எப்.எப்.ஏ., விழாவில் நடனமாடுவது குறித்து சந்தீப் மகிழ்ச்சி பொங்க கூறியிருப்பதாவது, ஐ.எம்.எப்.எப்.ஏ., விழாவில் நடனம் ஆட வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம். நானும், ஜெசியும் எங்களது சிறப்பான நடனத்தை கொடுப்போம். மராத்தி படத்தின் பெருமை உலகம் முழுக்க எங்களது நடனத்தால் பிரபலமாகும். விழா கொண்டாட்டங்கள், ஹாங்காங்கில் செப்., 20ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. செப்., 23ம் தேதி விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்தியாவில், இந்தி படங்களை தவிர்த்து ஏராளமான நல்ல படங்கள் பிறமொழிகளிலும் எடுக்கப்படுகிறது என்பதை இந்த ஐ.எம்.எப்.எப்.ஏ., விழா உலகத்தில் உள்ள அனைவருக்கும் உணர்த்தும் என்றார்.