ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒருகாலத்தில் பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஹேமாமாலினி. இந்தி நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார், இருந்தாலும் அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிப்பு மட்டுமல்லாது அரசியலிலும் மிகவும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஹேமாமாலினி. தற்போது தனது தொகுதி தொடர்பான பிரச்னைகளை கவனித்து வருவதோடு, தொகுதி மேம்பாட்டிற்காகவும் உழைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், என் வாழ்க்கை ஒரு நடிகையாக, மனைவியாக, தாயாக சிறிது காலம் கடந்தது. என் வாழ்க்கை பயணத்தில் பல்வேறு முகங்கள் கடந்து சென்றுள்ளன, அவை எல்லாமே முக்கியமான ரோல். நான் எனது பணியை சிறப்பாக செய்துள்ளேன். தொடர்ந்து ஒரு நடிகையாகவும், எம்பி.யாகவும் இருந்தாலும் என் குடும்பத்தின் மீது எப்போதும் கவனம் செலுத்துவேன், குடும்பத்தை விட்டு என்னால் இருக்க முடியாது. என் வாழ்க்கையின் காலைப்பொழுது உடற்பயிற்சி, யோகா மற்றும் பூஜையில் சென்று விடுகிறது. மீதம் இருக்கின்றன நேரத்தில் எனது குடும்பத்தையும், அரசியலையும் கவனித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.