நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
இந்திய சாதனையாளர்கள், சமூக விழிப்புணர்வு சார்ந்த படங்களை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு அவற்றிற்கு வரி விலக்க அளித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சர்தானி, மேரி கோம் ஆகிய படங்கள் வரிவிலக்கு பெற்றுள்ளன. இந்த வரிசையில் தற்போது ரோர்-டைகர்ஸ் ஆப் சுந்தர்பன்ஸ் படமும் சேர உள்ளது.
புலிகள் வேட்டையாடப்படுவது மற்றும் சுந்தரவன காடுகள் அழிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் இந்த படத்தில் தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. கோபம் கொண்ட புலிகள் சுந்தரவனக் காடுகளைச் சுற்றி வசிக்கும் மக்களை துன்புறுத்தி வருகின்றன. அதனால் அந்த கிராம வாசிகள் அந்த புலிகளை வேட்டையாட தயாராகிறார்கள். அந்த புலிகள் கொல்லப்படுகின்றனவா? அந்த மக்கள் புலிகளிடம் இருந்து தங்களை எப்படி காத்துக் கொள்கின்றனர்? மக்கள் தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்காக புலிகளை கொல்வது அவசியமா? என்பதை விளக்குவது தான், ரோர்ஸ்-டைகர்ஸ் ஆப் சுந்தபன்ஸ் படத்தின் கதை.
இது ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய படம் என படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்தியர்கள் அனைவரையும் இந்த படத்தை பார்க்கச் செய்வதற்காக ஊக்கப்படுத்தும் வகையில் இந்த படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புலிகளை பாதுகாப்பது மற்றும் வனங்களை பாதுகாப்பதை வலியுறுத்துவதற்காக இந்த கோரிக்கையை அரசு ஏற்று, வரி விலக்கு அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.