ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குழந்தை பெற்ற பின் திரையுகை விட்டு சில வருடங்களாக விலகியிருக்கும் ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருவதைப் பற்றி பல்வேறு வதந்திகள் வெளிவந்தன. பி.வாசு இயக்கும் தமிழ்ப் படத்தில் கூட நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆனால், அவற்றில் துளி கூட உண்மை இல்லாமல் போனது. அதன் பின் அதிகாரப்பூர்வமாக அவர் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. சஞ்சய் குப்தா இயக்கும் 'ஜஸ்பா' என்ற படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருகிறார். முழுக்க முழுக்க ஐஸ்வர்யா ராயை மையப்படுத்திய கதையைக் கொண்ட படம் இது.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக பாலிவுட்டில் சிறந்த நடிகர் என பாராட்டுப் பெற்று வரும் இர்பான் கான் நடிக்க உள்ளாராம். ஐஸ்வர்யா ராய் வக்கீலாக நடிக்க, இர்பான் சஸ்பென்ட் செய்யப்பட்ட காவலராக நடிக்கிறாராம். படத்தின் ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்க ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனரான ஸ்பிரோ ரசதோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்காக ஐஸ்வர்யா ராய் சண்டைப் பயிற்சிகளை தற்போதே ஆரம்பித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற கதாபாத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ளது.