டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராணி முகர்ஜி நடித்து வெளிவந்துள்ள 'மர்தானி' திரைப்படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதால் அந்தப் படத்தை சிறுவர், சிறுமிகள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் கோமடைந்துள்ளார் படத்தின் நாயகியான ராணி முகர்ஜி. இந்தப் படம் சிறுமிகள் கடத்தலைப் பற்றிய கதையை மையமாகக் கொண்ட படம். பத்து, பதினைந்து வயது உள்ள சிறுமிகள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது தனியாகச் செல்லக் கூடாது என்பதை வலியுறுத்தியுள்ள படம். இப்படிப்பட்ட படத்தை அந்த வயதில் உள்ள சிறுமிகள் பார்த்தால்தானே படத்தை எடுத்ததற்கான அர்த்தம் கிடைக்கும் என்கிறார் ராணி முகர்ஜி.
படத்தைப் பார்த்த பல பெண்களும் இப்படத்தை சிறுமிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், ஆமிர் கான் இப்படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டாம் என்று சொல்லி தேவையற்ற சர்ச்சை ஒன்றை கிளப்பியிருக்கிறார். அவர் மட்டும் நிர்வாணமாக போஸ் கொடுத்துவிட்டு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தை பார்க்க வேண்டாம் என்று சொல்வது நியாயமா எனக் கேள்வி எழுப்புகிறார்கள். இப்படத்திற்குஎந்த அடிப்படையில் 'ஏ' சர்டிபிகேட் வழங்கினார்கள் என சென்சார் போர்டிடம் கேள்வி எழுப்புகிறார் ராணி முகர்ஜி. எதை வைத்து படத்தை வேறுபடுத்துகிறார்கள் என்பது புரியவில்லை. சில வெளிநாடுகளில் உள்ளதைப் போல 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம், 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என வரைமுறையை கொண்டு வரலாமே என்கிறார்.
நியாயமான கேள்விதானே...நிறைவேற்றுவார்களா....?