ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எத்தனையோ விலங்குகள் இருந்தபோதும் நாய்கள் மீது மட்டும் என்னவோ நடிகைகளுக்கு பாசம் மிகுதியாக உள்ளது. அந்தவகையில், கோலிவுட்டைச் சேர்ந்த த்ரிஷா, சமந்தா போன்ற நடிகைகள் சமீபகாலமாக தெரு நாய்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் இறங்கி அவற்றுக்கு உதவி செய்வதோடு, யாராவது நாய்களை துனபுறுத்தினாலும் எச்சரிக்கை விடுகிறார்கள்.
இவர்களைப் போலவே பாலிவுட் நடிகை இஷா குப்தாவுக்கும் நாய்கள் என்றால் கொள்ளை பிரியமாம். அதனால் தனது வீட்டில் பல தெரு நாய்களை வளர்த்து வருகிறாராம். அந்த நாய்களை பராமரிக்கவே ஒரு பெருந்தொகையை செலவு செய்து வரும் இஷா குப்தா, யாராவது நாய்களை துன்புறுத்தும் விசயம் அறிந்தால் அவர்களை தேடிப்பிடித்து சண்டை செய்கிறாராம்.
அதோடு, நாய்களை அடிப்பவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் ஆவேசமாக குரல் கொடுத்து வரும் இஷாகுப்தா, நாய்களை தாக்குவதால் அதன் உறுப்புகள் பாதிக்கப்படும் அதனால் உறுப்புக்கு உறுப்பு என்கிற முறையில் தாக்குபவர்களின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும். அப்படி கடுமையான தண்டனை கொடுத்தால்தான் வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தும் எண்ணம் யாருக்கும் வராது என்று கூறியுள்ள இஷாகுப்தா, யாராவது நபர்கள் நாயை அடிப்பதை கண்டால் என்னிடம் பிடித்து தாருங்கள் அதற்கு சன்மானமாக உங்களுக்கு ஒரு லட்சம் தருகிறேன் என்றும் அறிவித்துள்ளார்.