பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நிழல் உலக தாதாவிடமிருந்து அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற தகவலை அடுத்து அவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஷாரூக்கானின் நெருங்கிய நண்பர் தயாரிப்பாளர் கரீம் மொரானி. சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். கடந்த இருதினங்களுக்கு முன்னர் இவரது இரவு வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மேலும் கரீம் மொரானிக்கு தொடர்ந்து செல்போனிலும் மிரட்டல் வந்தது. இந்த சம்பவத்துக்கு நிழல் உலக தாதா ரவி பூஜாரி தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரவி புஜாரியால் ஷாரூக்கானுக்கும் ஆபத்து ஏற்படலாம் என தவகல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து ஷாரூக்கானுக்கான பாதுகாப்பை மும்பை போலீசார் அதிகரித்துள்ளனர்.