மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
ஈசல் விஷன் சார்பில் டைரக்டர் ஷாகில் பிரேம் தயாரித்துள்ள மேட் அபவுட் டான்ஸ் என்ற படம் இன்று ரிலீசாகிறது. இந்த படத்தின் டைரக்டரான ஷாகில் பிரேமிற்கு பாலிவுட்டில் மிகப் பெரிய சப்போர்ட்டாக ஷாருக்கான் தான் இருந்து வருவதாக பரவலாக செய்திகள் பரவி உள்ளது.
இந்நிலையில் இன்று வெளியாகும் மேட் அபவுட் டான்ஸ் படம் பற்றியும், அதன் டைரக்டர் ஷாகில் பிரேம் பற்றியும் ஷாருக்கான் உற்சாகம் அளிக்கும் வகையில் பேசினார். பேட்டியில் ஷாருக்கான் கூறுகையில், ஷாகிலை எனக்கு சின்ன வயது முதலே தெரியும். ஆனால் அவர் நடிகராகவோ அல்லது டைரக்டராகவோ வர விரும்பியது எனக்கு தெரியாது.
அவரது இயக்கத்தில் நான் நிறைய படங்களில் நடத்திருக்கிறேன். அனைவகள் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மேட் படம் வித்தியாசமானது மட்டுமல்ல நம் நாட்டிற்கு புதிய விதமான கதையும் கூட. ஷாகிலை நான் பிரமோட் பண்ணுவதாக பலரும் கூறி வருகின்றனர். உண்மையில், யாரையும் யாரும் பிரமோட் செய்ய முடியாது. அவருடன் நிற்கிறேன் அவ்வளவு தான்.
ஷாகில் வித்தியாசமான புதிய கதைகள், நடிகர்கள், திறமைகளை உருவாக்கி வருகிறார். அதுனால் தான் நான் அவர் பக்கம் இருக்கிறேன். நான் எப்போதும் ஷாகிலிடம் கூறுவது ஒன்று மட்டும் தான். அது, உன் மனம் என்ன செய்ய விரும்புகிறதோ அதை தயங்காமல் செய். மற்றவற்றை புறந்தள்ளு. ஒவ்வொரு படத்தையும் உனது முதல் படமாக நினைத்து, அதேி முனைப்புடன் செய். ஏதாவது விரக்தியுடன் அந்த வேலையை செய்தால் அதுவே உனக்கு கடைசி படமாக மாறி விடும்.
எதிர்காலத்தில் எத்தனை பெரிய கனவு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் நமது முதல் கனவு, நினைவானால் அது எப்போதுமே சிறப்பு தான். ஷாகில் மன உறுதி மற்றும் நம்பிக்கையுடன் கடினமாக உழைக்கிறார். அதனால் தோல்விழடைய மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஒருவேளை தோல்வி ஏற்பட்டாலும் அப்போதும் நான் சொல்வது, ஒரு போதும் பின்வாங்கி விடாதே, எப்போதும் உன் மனம் என்ன சொல்கிறதோ அதையே செய் என்பது மட்டும் தான்.
இவ்வாறு ஷாருக்கான் பேசினார்.