ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில், சூர்யா நடிப்பில் ஹிட்டடித்த சிங்கம், சிங்கம்-2 படம் இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் ரோகித் ஷெட்டி இயக்கத்தில், அஜெய் தேவ்கன் நடிக்க முதலில் சிங்கம் ஹிட்டானது. தொடர்ந்து இப்போது சிங்கம் ரிட்டர்ன்ஸ் படமும் ரீ-மேக் செய்யப்பட்டு அதுவும் ரிலீஸாகி, இப்போது ஹிட் அடித்து கொண்டிருக்கிறது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மும்பை போலீஸ்க்கு ரோந்து பணிக்காக இரண்டு டாடா கார்களை அஜெய் தேவ்கன் பரிசளித்துள்ளார்.
மும்பையில், மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் முன்னிலையில், இரண்டு டாடா கார்களை அஜெய் தேவ்கன்னும், இயக்குநர் ரோகித் ஷெட்டியும் வழங்கினர். இதில் மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா, இணை கமிஷனர் ஹிம்மான்சூ ராய், டாடா மோட்டார்ஸ் துணை தலைவர் வி.எஸ்.நோரன்ஹா ஆகியோரும் கலந்து கொண்டனர்.