தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோமின் வாழ்க்கையை மையமாக வைத்து மேரி கோம் என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மேரி கோமாக, பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். இப்படத்தை இயக்கியுள்ளார். மேரி கோம் படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து வருகிற செப்டம்பர் 5ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மேரி கோம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் மேரி கோம் தனது குடும்பத்தாருடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆடியோ விழாவின் மேடை குத்துச்சண்டை நடைபெறும் மேடை போன்றும், அதை சுற்றி மேரி கோம் பெற்ற விருதுகள், மெடல்கள் அனைத்தும் தொங்கவிட்டபடி அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேரி கோமின் ஆடியோவை வெளியிட்டு பேசிய மேரி கோம், ப்ரியங்காவின் நடிப்பை ஸ்கிரீனில் பார்த்து நானே நடித்தது போன்று உணர்ந்தேன். எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் வரை யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. என்னைப்போன்று பலரும் நம் நாட்டில் உரிய அங்கீகாரம் இல்லாமல் இருக்கின்றனர். என் வாழ்க்கையை இயக்குநர் படமாக்க எண்ணி கேட்டபோது, நான் முதலில் நினைத்தது, அவருக்கு மூளை கோளாறு ஏற்பட்டு விட்டது என்று... ஆனால் இப்போது நான் மேலும் பிரபலமடைந்து விட்டேன். சஞ்சய் லீலாபன்சாலி, ஓமங் குமார், பிரியங்கா சோப்ரா அனைவருக்கும் என் நன்றி என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா, இயக்குநர் ஓமங் குமார், சஞ்சய் லீலா பன்சாலி, மேரி மோமின் கணவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில், ப்ரியங்கா சோப்ரா, படத்தில் தான் பாடிய பாடலை பாடியது ஹைலைட்டாக அமைந்தது.