பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மோர் தாகி கே பிகாவ் என்ற சட்டீஸ்கர் மொழி திரைப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி அன்று வெளிவரும் என்று அதன் தயாரிப்பாளர் பெரிய அளவில் விளம்பரம் செய்து விட்டார். ஆனால் படம் தயாராவதற்கு சிறிது தாமதமாகிவிட்டது. அதனால் அவசர அவசரமாக படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பினார். தணிக்கை குழு வாரியத் தலைவர் ராகேஷ் குமார், தயாரிப்பாளரின் அவசரத்தை புரிந்து கொண்டு உடனடியாக தணிக்கை சான்றிதழ் தரவேண்டும் என்றால் 70 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று ஸ்ரீபதி மிஸ்ரா என்ற ஏஜெண்டு மூலம் கேட்டிருக்கிறார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத தயாரிப்பாளர் இதுபற்றி சி.பி.ஐயிடம் புகார் செய்தார். சி.பி.ஐ அதிகாரிகள் அடையாளமிட்ட லஞ்சப் பணத்தை தயாரிப்பாளரிடம் கொடுத்து அதனை ராகேஷ் குமார் மற்றும் அவரது ஏஜெண்டிடம் கொடுக்கச் செய்து இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் ராகேஷ் குமார் பல தயாரிப்பாளர்களிடம் இதுபோன்ற லஞ்சம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. ரெயில்வே பணியாளர் அதிகாரியாக இருந்த ராகேஷ் குமார் கடந்த ஜனவரி மாதம் தணிக்கை குழு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.