ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஹேமாமாலினி. நம்மூர் தமிழ்நாட்டு பொண்ணான இவர், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். இந்தி நடிகர் தர்மேந்திராவை திருமணம் செய்து கொண்டு பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். ஒருகட்டத்தில் சினிமாவிற்கு முழுக்கும் போட்டார். தற்போது எம்.பி.யாக இருக்கும் ஹேமாமாலினி, நீண்டஇடைவேளைக்கு பிறகு பிரபல இயக்குநர் ரமேஷ் சிப்பி இயக்கும், ''சிம்லா மிர்ச்சி'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக ராஜ்குமார் ராவ் மற்றும் ஹீரோயினாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றனர்.
இப்படத்தில் நடிப்பது குறித்து ஹேமா மாலினி அளித்துள்ள பேட்டியில், ''என் சினிமா கேரியரில் முக்கியமான படங்களான 'ஷோலே', 'சீதா அர் கீதா' போன்ற படங்கள் ரமேஷ் சிப்பி இயக்கியது தான். இப்போது மீண்டும் அவரது இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி. பார்லிமென்ட் வேலைகளில் பிஸியாக இருந்தாலும் இப்படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணமே படத்தின் கதை, எனது கேரக்டர் மற்றும் இயக்குநர் ரமேஷ் சிப்பி தான். மேலும், எனது மற்ற படங்கள் போன்று தான் ரமேஷ் சிப்பி இயக்கும் இந்த படமும், இருந்தாலும் இப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்கிறார் மாஜி கனவு கன்னி.