ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் தனது சொந்த ஊரான பாட்னாவிற்கு வந்திருந்த நடிகை நீது சந்திரா, அங்கு கீதாஞ்சலி என்னும் என்னும் ஷோரூமை திறந்து வைத்தார். பின்னர் தனது வீட்டிற்கு சென்ற அவர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை கழித்தார்.
மாமாக்கள், அத்தைகளையும் சந்தித்து பேசிய நீது, இரண்டு நாட்களுக்க முன் ரக்ஷா வந்தன் பண்டிகையையும் அவர்களுடன் கொண்டாடினார். தனது செல்ல நாய்களுடன் கொஞ்சி விளையாடிய நீது, அவற்றை தனது பிள்ளைகள் என்று கூறினார்.
இது பற்றி டுவிட்டரில் அவர் தனது கருத்துக்களையும், தனது 3 நாய்குட்டிகளுடன் அவர் கட்டிப்பிடித்து கொஞ்சி விளையாடிய போட்டோவையும் பதிவு செய்துள்ளார். அதில் அவர், மிக குறைந்த நேரமே பாட்னாவில் எனது வீட்டில் இருக்க முடிந்தது. அங்கு நான் எனது 3 மாமாக்களையும் மாமிகளையும் சந்தித்தேன். எனது சகோதரர் அம்பர் சந்திராவிற்கு ராக்கி கட்டி விட்டேன். எனத குழந்தைகளையும் சந்தித்தேன். அவைகள் என்னை ரெம்பவே மிஸ் பண்றத பார்க்க முடியுது என குறிப்பிட்டுள்ளார்.