மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
ஒரு காலத்தில் இந்தி படங்களின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ராஜேஷ் கண்ணா. 50 வருடங்களுக்கு முன்பு ராஜேந்திர குமார் என்ற நடிகரிடமிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மும்பை பாந்திரா கார்டர் ரோட்டில் உள்ள பங்களாவை வாங்கினார். அதற்கு ஆசிர்வாத் என்று பெயரிட்டு அதில் குடியேறினார். தினமும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் அவரைக் காண இந்த பங்களா நோக்கி படையெடுத்தார்கள். பால்கனியில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து விட்டுதான் ராஜேஷ் கண்ணா படப்பிடிப்பிற்கு கிளம்புவார். 2012ம் ஆண்டு அவர் இறக்கும் வரை அந்த பங்களாவில்தான் வசித்தார்.
ராஜேஷ் கண்ணா இறந்த பிறகு இந்த பங்களாவை அவரது நினைவிடமாக மாற்ற அவரது மகன்கள் விரும்பினார்கள். ஆனால் ராஜேஷ் கண்ணாவின் கடைசி காலத்தில் அவருடன் வாழ்ந்த அனிதா அத்வானி என்ற பெண் பங்களாவில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தார். மேலும் சில சொத்து வழக்குகள் தொடரப்பட்டது. சில கடன் பிரச்னைகளும் இருந்தது. அதனால் பங்களாவை விற்று விட முடிவு செய்தனர்.
தற்போது இந்த பங்களாவை மும்பை தொழில் அதிபர் சாஸ்ஷி ஷெட்டி என்பவர் 95 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார். "சுமார் 6490 அடி பரப்பளவு கொண்ட இந்த பங்களாவின் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 200 கோடி. ஆனால், பங்களாவில் பேய் நடமாட்டம் இருப்பதாக வந்த வதந்திகள், அதை புதுப்பிக்க ஆகும் செலவுகளை கணக்கிட்டு யாரும் வாங்க முன்வராமல் இருந்தனர். அதனால்தான் குறைந்த தொலைக்கு விலைபோயுள்ளது. சில பரிகார பூஜைகளை நடத்திவிட்டு வீட்டில் குடியேற திட்டமிட்டிருக்கிறார் சாஸ்தி ஷெட்டி" என மும்பை ரியல் எஸ்டேட் தொழில் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.