ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவில் பெரும் பெற்றி பெற்ற த்ரிஷ்யம், கன்னடம், தெலுங்கில் ரீமேக் ஆகி அங்கும் வெற்றி பெற்றது. தமிழில் கமல் நடிப்பில் தொடங்கியிருக்கிறது. தமிழ் திரிஷ்யத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே இயக்குகிறார். இந்த நிலையில் த்ரிஷ்யம் படம் ஜப்பானிய எழுத்தாளர் ஹிகாசினோ எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவான தி டிவோசன் ஆப் சஸ்பெக்ட் எக்ஸ் என்ற படத்தின் அப்பட்டமான காப்பி. அந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய நான்தான் உரிமம் வைத்திருக்கிறேன் என்று இந்தி பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், ஜீது ஜோசப்புக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கு பதில் அளித்து ஜீது ஜோசப் கூறியதாவது: ஏக்தா கபூரின் நோட்டீஸ் வந்துள்ளது. அவர் குறிப்பிட்டிருக்கும் படத்தை நானும் பார்த்திருக்கிறேன். அதுவும் ஒரு கொலையை புத்திசாலித்தனமாக மறைக்கும் கதை கருவை கொண்டது. ஆனால் அதற்கும், த்ரிஷியத்திற்கும் சம்பந்தமில்லை. நான் எந்த படத்தையும் காப்பி அடிக்கவில்லை. தழுவி எடுக்கவும் இல்லை. படைப்பாளிகளுக்கு இடையே சில ஒற்றுமைகள் யதார்த்தமாக அமைந்து விடுவது உண்டு. அதை குற்றமாக பார்க்க வேண்டியதில்லை. படம் வெளியாகி இரண்டு வருடமாகிறது. த்ரிஷ்யம் இந்தியில் ரீமேக் ஆகும் சூழ்நிலையில்தான் ஏக்தா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். என்கிறார் ஜீது ஜோசப்.