தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா, கோவிந்தா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஹாலிடே' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி விட்டதாம். அது மட்டுமல்ல இந்த ஆண்டு வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலை பெறும் படம் என்ற சாதனையையும் இந்த வாரம் புரியும் என்கிறார்கள்.
இந்தித் திரையுலகைப் பொறுத்தவரை 100 கோடி ரூபாய் மேல் வசூலிக்கும் படங்கள் '100 கோடி ரூபாய் கிளப்' என பெருமையாக அழைப்பது வழக்கம். அந்த விதத்தில் இந்த ஆண்டில் சல்மான் கான் நடித்த 'ஜெய் ஹோ', அர்ஜுன் கபூர், அலியா பட் நடித்த '2 ஸ்டேட்ஸ்' ஆகிய படங்கள் மட்டுமே 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. 'ஜெய் ஹோ' இதுவரை 109 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இந்த வசூலை இந்த வார இறுதிக்குள் 'ஹாலிடே' திரைப்படம் பெற்றுவிடும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இதற்கு முன் ஆமிர் கான் நடித்து வெளிவந்த 'கஜினி' படமும் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தனது இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்றுள்ளதால் முருகதாஸ் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். அந்த வெற்றிப் பெருமிதத்துடன் விஜய், சமந்தா நடிப்பில் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் 'கத்தி' படத்தையும் மாபெரும் வெற்றிப் படமாக்க முயன்று வருகிறாராம். இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்க அக்ஷய் குமார் விருப்பத்தை தெரிவித்துள்ளாராம். தமிழ் இயக்குனர்களில் தற்போது ஷங்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் முருகதாஸ் தான்.