தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தி நடிகையும், லிங்கா படத்தில் ரஜினியின் ஜோடியாக நடித்து வருபவருமான சோனாக்ஷி சின்ஹா மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று கணித்திருந்தேன். அது நடந்து விட்டது, சந்தோஷமாக இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் மோடி பல முன்னேற்றமான மாற்றங்களை கொண்டு வந்தார். அதேப்போல இந்தியாவிலும் மாற்றங்களை கொண்டு வருவார் என்று உறுதியாக நம்புகிறேன். இது இந்தியாவின் மாற்றத்துக்கான நல்ல அறிகுறி.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் 7 பெண்களுக்கு பதவி கொடுத்திருப்பதை வரவேற்கிறேன் பாராட்டுகிறேன். அதுவும் மூன்றாவது அதிகாரத்தில் ஒரு பெண்ணுக்கு இடம் கொடுத்திருப்பது அறிந்து பூரிப்படைந்தேன். எனது அப்பா (சத்ருஹன் சின்ஹா) அரசியலில் இருந்தாலும் வீட்டில் அரசியல் பேச மாட்டோம். மற்ற பொது விஷயங்களைத்தான் பேசிக் கொள்வோம். அவர் தேர்தலில் வெற்றி பெற்றதால் பிசியாக இந்தியாவை சுற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு சமீபத்தில் இருதய ஆபரேஷன் நடந்தது. அதனால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனை சென்று வருவது வழக்கம். அதனை செய்தியாக்க வேண்டாம் என்று மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சோனாக்ஷி கூறியிருக்கிறார்.