விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
தமிழில், களவாணி படத்தில் அறிமுகமான மலையாள நடிகை ஓவியா. மெரீனா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், படங்களில் நடித்தார். தற்போது அகராதி, யாமிருக்க பயமே படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் களவாணிக்கு பிறகு பெரிய வெற்றி ஓவியாவுக்கு கைகூடவில்லை. இந்த நிலையில் பாலிவுட் நடிகையாகிவிட்டார். ஜாட் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கிறார். இது முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம்.
இதுகுறித்து ஓவியா கூறியிருப்பதாவது: என் முதல் இந்திப் படம் ஜாட். இது ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள படம். சிலரால் பாதிக்கப்பட்ட நான் அவர்களை பழி தீர்ப்பது மாதிரியான கதை. நடிக்கும்போதே த்ரில்லாக இருந்தது. படப்பிடிப்புகள் ஹரியானாவில் நடந்தது. தற்போது சென்னையில்தான் இருக்கிறேன். யாமிருக்க பயமே, அகராதி படங்களுக்கு பிறகு மூன்று தமிழ் படங்களில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது என்றார்.