டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
1963ம் ஆண்டு சத்யஜித்ரே இயக்கிய பெங்காலி திரைப்படம் மகாநகர். அந்த காலத்தில் மாபெரும் வெற்றி பெற்றதோடு இன்று வரைக்கும் விருதுகளை குவித்துக் கொண்டிருக்கும் படம். சினிமா கற்பவர்களுக்கு பாடமாக இருக்கிற படம். இந்தப் படத்தின் பிரதிகள் சிதிலமடைந்து விட்டன. பல பிரிண்டுகளை சேகரித்து அதில் சிதிலமடையாமல் இருக்கும் காட்சிகளை எடுத்து மறுசீரமைப்பு செய்து வருகிறார்கள். கடந்த 2012ம் ஆண்டிலிருந்து 300 கம்ப்பயூட்டர் நிபுணர்கள் பிரேம் பை பிரேமாக மகாநகருக்கு மீண்டும் உயிர் கொடுத்து வருகிறார்கள்.
பெண்கள் வேலைக்கு செல்வதை சமூக குற்றமாக கருதிய காலத்தில் துணிச்சலாக ஒரு பெண் வேலைக்கு செல்வதும், அவள் சந்திக்கும் பிரச்னைகளும்தான் படத்தின் கதை. இந்த கதையை இன்ஸ்பிரேசனாக கொண்டுதான் கே.பாலச்சந்தர். அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, மனதில் உறுதி வேண்டும் படங்களை இயக்கினார். முதல் கட்டமாக சென்னை உள்ளிட்ட 9 நகரங்களில் வெளியிட இருக்கிறார்கள்.