இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யாராய். கர்நாடகத்தை சேர்ந்தவரான ஐஸ்வர்யாராய், இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகும் சினிமாவில் நடித்து வந்தார். ஆனால், அபிஷேக்கின் பெற்றோர், பேரக்குழந்தை வேண்டும் என்று அடம்பிடித்ததால், அதன்பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு, ஆரத்யா என்ற மகளை பெற்றெடுத்தார்.
அதையடுத்து சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தபோதும் சிலர் அவரை நடிக்க கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கினர். அதனால் தனது உடம்பை குறைக்கும் முயற்சிகளில் இறங்கினார் ஐஸ்வர்யாராய். ஆனால் அதற்கு சரியான பலன் கிடைக்கவிலலை. ஆனபோதும், மணிரத்னம் இயக்கயிருக்கும் புதிய படத்தில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக அவர் நடிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதோடு, டைரக்டர் பி.வாசுவும் தான் இயக்கும் அனிமேஷன் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியிட்டார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார் ஐஸ்வர்யாராய். இதனால் அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது அதனால் அவரை நடிக்க வைக்கப்போவதாக கூறி வந்த டைரக்டர்களும், மீண்டும் நடிக்க வைப்பதற்கு முயற்சி எடுக்க இருந்தவர்களும் பலத்த அதிர்ச்சிககு ஆளாகியுள்ளனர். இதனால் புதிதாக எந்த படத்திலும் ஐஸ்வர்யாராய் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.