டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல பாலிவுட் ஹீரோயின் அனுஷ்கா சர்மா, இப்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். என்.எச் 10 என்ற படத்தை தயாரித்து நவ்தீப் சிங்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் அருகே உள்ள பாலைவனத்தில் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு வீசிய கடும் பாலைவன புயலால் பலபேர் இறந்தனர். இந்த புயலில் அனுஷ்கா சர்மாவின் பட யூனிட்டும் மாட்டிக் கொண்டது.
மணல் புயல் வீச ஆரம்பித்ததுமே அனுஷ்கா சர்மாவையும், நவ்தீப் சிங்கையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு கேமரா உள்ளிட்ட முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். மணல் புயலால் பாடல் காட்சிக்காக போடப்பட்டிருந்த செட்டுகள் அனைத்தும் வீணானது. இதனால் பல லட்சம் நஷ்டம் அடைந்தோடு படப்பிடிப்பும் நின்று விட்டது.
"படப்பிடிப்புக்கு போட்டிருந்த அனைத்து செட்டுகளும் சேதமைடைந்து விட்டது. பல லட்சம் ரூபாய் எனக்கு நஷ்டம்தான். ஆனால் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது ஆறுதலாக இருக்கிறது. அந்த நாளை மறக்க முடியாது. காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி" என்ற தனது டுவிட்டரில் எழுதியிருக்கிறார் அனுஷ்கா சர்மா.