கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சமீபத்தில் வெளியான கஹானி, லஞ்ச் பாக்ஸ், தலாஷ் படங்கள் மூலம் புகழ்பெற்றவர் இந்தி நடிகர் நவாஸூதீன். கையில் இரண்டு படங்கள் இருக்கும் நிலையிலும் திடீரென டி.வி.தொகுப்பாளராகி விட்டார். அதுவும் அரசியல் நிகழ்ச்சிக்கு. இந்தியாவின் முக்கிய தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களை நேரில் பேட்டி காண்கிறார். அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்து சரமாரியான கேள்விகளை கேட்டு திணறடிக்கிறார். அதுவும் பதட்டம் நிறைந்த பீகார் மாநிலத்தில்.
இதுவரை லாலுபிரசாத் யாதவ், சத்ருஹன் சின்கா உள்ளிட்ட பிரமுகர்களை பேட்டி எடுத்து அதிர வைத்திருக்கிறார். இதனால் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தனியார் சேனல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் உயர்ந்திருக்கிறது. வடகத்தி அரசியல் தலைவர்கள் நவாஸூதீன் பேட்டி என்றால் அலறி அடித்து ஓடுகிறார்களாம். அந்த அளவுக்கு நிகழ்ச்சி பிரபலம். "என்னதான் சினிமாவில் நடித்து பெயர் வாங்கினாலும் மக்களுக்காக மக்களோடு நின்று உழைப்பில் தனி சுகம் இருக்கிறது" என்கிறார் நவாஸூதீன்.