தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் வெளியான கஹானி, லஞ்ச் பாக்ஸ், தலாஷ் படங்கள் மூலம் புகழ்பெற்றவர் இந்தி நடிகர் நவாஸூதீன். கையில் இரண்டு படங்கள் இருக்கும் நிலையிலும் திடீரென டி.வி.தொகுப்பாளராகி விட்டார். அதுவும் அரசியல் நிகழ்ச்சிக்கு. இந்தியாவின் முக்கிய தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து அவர்களை நேரில் பேட்டி காண்கிறார். அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சந்தித்து சரமாரியான கேள்விகளை கேட்டு திணறடிக்கிறார். அதுவும் பதட்டம் நிறைந்த பீகார் மாநிலத்தில்.
இதுவரை லாலுபிரசாத் யாதவ், சத்ருஹன் சின்கா உள்ளிட்ட பிரமுகர்களை பேட்டி எடுத்து அதிர வைத்திருக்கிறார். இதனால் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தனியார் சேனல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் உயர்ந்திருக்கிறது. வடகத்தி அரசியல் தலைவர்கள் நவாஸூதீன் பேட்டி என்றால் அலறி அடித்து ஓடுகிறார்களாம். அந்த அளவுக்கு நிகழ்ச்சி பிரபலம். "என்னதான் சினிமாவில் நடித்து பெயர் வாங்கினாலும் மக்களுக்காக மக்களோடு நின்று உழைப்பில் தனி சுகம் இருக்கிறது" என்கிறார் நவாஸூதீன்.