டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்துள்ள இந்தப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளவர் சலீம் அகமது. இவர் இயக்குனராக அறிமுகமான படம் ஆதாமின்டே மகன் அபு. (2011) கோவா திரைப்பட விழாவிலும், பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகள் பெற்றபடம். இந்தப்படத்தில் ஹஜ் யாத்திரைக்கு செல்ல விரும்பும் வயோதிக முஸ்லீமாக நடித்த சலீம் குமாருக்கு இந்தியாவின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. சரி இந்தப்படத்திற்கு வருவோம்...
இந்தியாவில் கல்வி அறிவு அதிகமாக உள்ளதும், அடர்த்தியான மக்கள் தொகையும் உள்ள மாநிலமான கேரளாவின் முக்கிய பிரச்னையான இப்போதைய நிலைமைக்கும், முன்னேற்றத்தின் விளைவுகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தை இந்தப்படம் பிரதிபலிக்கிறது.
கேரளாவின் ஒரு கிராமத்தில் சிறுமளிகை கடை நடத்திக் கொண்டிருப்பவர் குஞ்சநந்தன் (மம்முட்டி). அவர் தந்தை அவருக்கு விட்டுச் சென்றது கடை. கடையை தன் உயிராக, வாழ்க்கையாக நினைக்கிறார் மம்முட்டி. கடை இருக்கும் இடத்தின் சொந்தக்காரர், கடையை காலி பண்ணிக் கொடுங்கள், அந்த இடம் தனக்கு வேண்டும் என்று கேட்கிறார். மம்முட்டி காலி பண்ண மறுக்கிறார்.
மம்முட்டின் மனைவிக்கு இவர் மளிகை கடை வைத்திருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. நிறையபேரைப்போல வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் அல்லது வேறு தொழில் பார்த்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம், ஏன் தான் இந்த மளிகை கடையை நடத்துவேன் என்று வீம்பு பிடிக்கிறீர்களோ என ஆதங்கப்படுகிறார். கணவரை இந்த காரணத்திற்காகவே வெறுப்பவர், மனைவி தரும் மரியாதையை வைத்தே ஒரு மனிதனை சமுதாயம் எப்படி எடை போடுகிறது என்று மம்முட்டி வருத்தப்படுகிறார்.
இந்த நிலையில் திடீரென்று மற்றொரு பிரச்சனை வருகிறது. மம்முட்டி கடை மற்றும் மேலும் சில கடைகள் உள்ள இடத்தின் வழியாக அரசின் நெடுஞ்சாலை அமைய இருக்கிறது, எனவே அனைவரும் கடைகளை காலி பண்ண வேண்டும் என்று மாநில அரசு நோட்டீஸ் கொடுக்கிறது. இதனை தடுக்க மம்முட்டியும், வேறு சிலரும் பல முயற்சிகள் எடுக்கின்றனர். ஆனால் பலன் இல்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தியாவது கடையை விட்டுவிட்டு வேறு லாபகரமான வியாபாரம் செய்யுங்கள் என்று மனைவி மீண்டும் சொல்கிறார். ஆனால் மம்முட்டியோ தொடர்ந்து மறுக்கிறார்.
இதற்கிடையே, பள்ளியில் படிக்கும் மம்முட்டியின் மகன் வீட்டில் விளையாடும்போது அடிப்பட்டு விடுகிறார். மம்முட்டியும், அவர் மனைவியும் அவனை எடுத்துக்கொண்டு ஒரு டாக்ஸியில் அடுத்த ஊரில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்கிறார்கள். ஆனால் வழியில் இருக்கும் குறுகிய ரோடுகள், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், அதையும் மீறி இவர்கள் வந்தால் நடுவே ஒரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம், கட்சி தொண்டர்கள் இவர்களது காருக்கு வழிவிட மறுக்கின்றனர். கடைசியாக ஒவ்வொருவரிடமும் கெஞ்சி கூத்தாடி ஒருவழியாக ஆஸ்பத்திரியை வந்து அடைகின்றனர். மகனுக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நீண்ட பெரிய சாலைகள் ஊருக்கு இருப்பது, மக்களுக்கும் நன்மை தானே என்று மம்முட்டி உணர்கிறார்.
படம் முழுக்க வேஷ்டி-சட்டையில் மிகவும் எளிமையாக வந்து குஞ்சநந்தன் பாத்திரத்தில் மம்முட்டி கச்சிதமாக நடித்துள்ளார். அவரது மனைவியாக நைலா உஷா நடித்துள்ளார். இளமையாக இருக்கும் நைலாவும், மம்முட்டிக்கும் வயது வித்தியாசம் தெரிகிறது. சமுதாயத்தில் இருக்கும் நடப்பு பிரச்னையை மனதில் வைத்து சலீம் அகமது இப்படத்தை கனக்கச்சிதமாக இயக்கியுள்ளார். இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட பல இந்திய மொழி படங்களை உள்ளடக்கிய