பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை ஹேமா மாலியின் இரண்டாவது மகள் அஹானா திருமணம் அடுத்தாண்டு பிப். 2ம் தேதி நடக்கிறது. டில்லியை சேர்ந்த தொழிலதிபர் வைபவ் ஓராவை மணக்கிறார். தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமா மாலினி, இந்தியில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இந்தி நடிகர் தர்மேந்திராவை காதலித்து கல்யாணம் செய்தவர். இவர்களுக்கு இஷா தியோல், அஹானா தியோல் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் இஷாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாவது மகள் அஹானாவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
இஷாவின் திருமணத்தின் போது அஹானாவும், டில்லியை சேர்ந்த தொழிலதிபர் வைபவ்வும் சந்தித்துள்ளனர். பார்த்த மாத்திரமே இருவருக்கும் பிடித்துவிட்டது. இதனையடுத்து இருவரது வீட்டாரும் கலந்து பேசி இவர்களது திருமணத்திற்கு ஓ.கே. சொன்னனர். கடந்த 10தினங்களுக்கு முன்னர் அக்டோபர் 22ம் தேதி தான் வைபவ்-அஹானாவின் திருமணம் நிச்சயமானது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், சத்ருஹன் சின்ஹா, வினோத் கண்ணா, நடிகைகள் ரேகா, வைஜெயந்தி மாலா உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமணதேதி முடிவாகாமல் இருந்த நிலையில் இப்போது திருமண தேதி முடிவாகி இருக்கிறது. 2014ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும், திருமணத்திற்கான வேலைகள் இப்போதே தொடங்கிவிட்டதாகவும், இன்னும் நான்கு மாத காலத்திற்கு திருமணம் தொடர்பான வேலைகளில் பிஸியாக இருக்க போவதாகவும் ஹேமா மாலினி கூறியுள்ளார்.
திருமணம் தமிழ்நாட்டு முறைப்படியா அல்லது பஞ்சாபி முறைப்படியா நடக்கிறதா என்பது குறித்த கேள்விக்கு ஹேமா எதுவும் கூறவில்லை, மும்பையில் திருமணமும், டில்லியில் திருமண வரவேற்பும் நடைபெற போவதாக தெரிவித்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகும் அஹானா தனது நடனத்தை(ஒடிசி நடனம்) தொடர்வார் என்று ஹேமா கூறியுள்ளார்.