இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி என, பல படங்களில் நடித்தவர், சமீரா ரெட்டி. அனுஷ்கா போன்று, நல்ல உயரமும், உடல் கட்டும் உடைய சமீராவுக்கு, தற்போது தமிழில் படங்கள் இல்லை. ஆனால், இந்தியில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளதாக கூறுகிறார். சமீபத்தில், கோலிவுட்டுக்கு வந்த அவரிடம், புதிய படங்களில் நடிக்காதது ஏன் என, கேட்டபோது, நான், எதிர்பார்ப்பது போன்ற கதைகளும், கேரக்டர்களும், தமிழில் கிடைக்கவில்லை. அதனால் தான், முழுநேர பாலிவுட் நடிகையாகி விட்டேன் என்கிறார். நான், எந்த விஷயத் திலுமே, அவ்வளவு சீக்கிரம் திருப்தி அடைந்து விட மாட்டேன். படத்துக்கு படம், என் கேரக்டர்கள், மாறுபட்டதாக இருக்க வேண்டும் என, ஆசைப்படுவேன். ஆனால் தமிழில், தொடர்ந்து, ஒரே மாதிரியான கேரக்டர்கள் வருவதால், சிறிய இடைவெளியை எனக்கு நானே, ஏற்படுத்தி கொண்டுள்ளேன். என் மனதுக்கு பிடித்த கேரக்டர்கள் கிடைத்தால், நடிக்க சம்மதிப்பேன் என்கிறார், சமீரா.