மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் வெற்றியில் திளைத்துப் போயிருக்கும் தீபிகா படுகோனே, அடுத்து, ரன்வீர் சிங் ஜோடியாக, ராம்லீலா என்ற படத்தில் நடிக்கிறார். பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒருநாள் திடீரென்று குமுறி, குமுறி அழுதுக் கொண்டிருந்தாராம் தீபிகா.படத்தின் கதாநாயகி அழுவதால், படப்பிடிப்பு யூனிட்டே அதிர்ந்து போனதாம். உடனே, சிலர் அவரை நெருங்கி, இந்த அளவுக்கு அழுவதற்கு என்ன காரணம்? என்று, அவரை விசாரித்தனராம். அப்போது, "சினிமாவில் நான் நடிக்க வந்து எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன. ஆனால், இதுவரை ஒரு டைரக்டர் கூட, என் நடிப்பை மனதார பாராட்டியதில்லை. முதன் முறையாக சஞ்சய்லீலா பன்சாலி தான், உன் நடிப்பு அபாரம். இந்தப் படத்தில், உன் நடிப்பு தான் அதிகமாக பேசப்படும என்றார். அந்த சந்தோஷத்தில் தான் என்னையுமறியாமல் அழுதுவிட்டேன்" என்று அதிர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.