'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
போலீஸ் கதைகளை படமாக்குவதென்றால், மலையாள திரைப்பட இயக்குனர்களுக்கு, அல்வா சாப்பிடுவது மாதிரி. இந்த படத்தின் மூலம், மீண்டும் ஒரு அல்வா சாப்பிட முடிவு செய்துள்ளார், இயக்குனர், ஜீத்து ஜோசப். மலையாளத்தின் "எவர்கிரீன் ஹீரோ பிரித்விராஜ், இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நேர்மையான போலீஸ் அதிகாரியான இவருக்கு, எதிரிகளால், சொந்த வாழ்க்கையில் பல்வேறு இழப்புகள் ஏற்படுகின்றன. இந்த இழப்புகளை சமாளிக்க, மதுவின் உதவியை நாடுகிறார். நாளடைவில், மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார். அந்தநேரத்தில், சில முக்கியமான வழக்குகளை விசாரிப்பதற்காக, பிரித்விராஜின் உதவியை நாடுகிறது, கேரள போலீஸ். இந்த பணியை, அவர் ஏற்றுக் கொள்கிறாரா? மது பழக்கத்திலிருந்து விடுதலையாகிறாரா என்பதை, பரபர திருப்பங்களுடன் விளக்கியுள்ளனர். இதில், பிரித்விராஜுக்கு ஜோடியாக நடித்திருப்பது, மேக்னா ராஜ். .