வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அஜீத். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதோடு சினிமா உலகில் நிறையபேருக்கு உதவிகள் செய்கிறார். இதனால் அவரை தமிழ்நாட்டைச்சேர்ந்தவர்களுக்கு பிடிக்கிறது ஆனால், இப்போது மாநிலம் கடந்து அஜீத்தை பெருமையாக பேசத் தொடங்கிவிட்டார்கள்.
அப்படித்தான் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவிக்காக சிறிய ரோலில் நடித்த அஜீத், அதற்காக சம்பளமே வாங்கிக்கொள்ளவில்லை. அதனால், அந்த நன்றிக்கடனை இன்றுவரை மறக்காத ஸ்ரீதேவி, அஜீத்தை பெருமையாக சொல்வதோடு, அவருடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பதாகவும் கூறி வருகிறார்.
இந்தநிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஷாரூக்கான் இந்தியில் நடித்த அசோகா என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அஜீத் நடித்திருந்தார். ஆனால் அதற்காகவும் அவர் சம்பளமே வாங்கிக்கெள்ளவில்லையாம். அதை சமீபத்தில் நினைவுகூர்ந்துள்ளார் ஷாரூக்கான். அப்போதைக்கு அஜீத்தை நான் சிறிய நடிகர் என்றுதான் நினைத்தேன். ஆனால் சமீபகாலமாக தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து சென்றபிறகுதான் அவர் பெரிய ஹீரோ என்பதை தெரிந்து கொண்டேன். ஆனபோதும், எந்த பந்தாவும் இல்லாமல் எளிமையாக அவர் என்னுடன் பழகி என் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார் என்று அஜீத் பற்றி சொல்கிறார் ஷாரூக்.