'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன் இப்போதும் படங்களில் நடித்து வருகிறார். அதனால் அவருக்கான ரசிகர்கள் குறையவில்லை. மாறாக, நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேயிருக்கிறார்களாம். அவர் மும்பையிலுள்ள எந்த ஏரியாவுக்கு சென்றாலும் ரசிகர்கள் அவரை மொய்த்துக்கொள்கிறார்களாம். அதனால் தனது ரசிகர்களின் அன்புக்காக அவர்களை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தித்து வருகிறார் அமிதாப்.
ஆனால், அப்படி சந்திப்பவர் அவர்களுடன் நெருங்கி வந்து உரையாடுவதெல்லாம் கிடையாதாம். தனது வீட்டு பால்கனியில் நின்றபடி ரசிகர்களைப்பார்த்து கையசைப்பாராம். அதைப்பார்த்து அவர்கள் உற்சாக முழக்கமிடுவதோடு, போட்டோக்களையும் சரமாரியாக எடுப்பார்களாம். சில நிமிடங்கள் அப்படி நின்று கையசைக்கும் அமிதாப்பச்சன் பின்னர் விடைபெற்று வீட்டுக்குள் சென்று விடுவாராம். இது ரொம்ப வருடங்களாக நடந்து வருகிறதாம்.
இந்தநிலையில், சமீபத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் தனது மகன் அபிசேக்பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய், பேத்தி ஆரத்யா ஆகியோருடன் காட்சி கொடுத்து கூடியிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டாராம். குடும்பத்தினரோடு பால்கனியில் நின்றபடி அவர்கள் போஸ் கொடுக்க ரசிகர்களும், மீடியாக்களும் அதை போட்டோ, வீடியோ என எடுத்துக்கொண்டார்களாம்.