தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எனக்கு ஜீன்ஸ், டீ சர்ட் அணிவது பிடிக்காது; புடவை அணிவதுதான் பிடித்திருக்கிறது என்று நடிகை ஸ்ருதிகா கூறியுள்ளார். பெரிய திரையில் அறிமுகமாகி, இன்று சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமாக மிளிர்ந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ருதிகா. அவர் அளித்துள்ள பேட்டியில், என் அம்மா பிறந்தது சென்னை, அப்பா மலேசியா. நான் பத்தாவது வரை மலேசியாவில் படிச்சேன். அப்புறம் சென்னை வந்து ப்ளஸ் ஒன் சேர்ந்தேன். நான் மீடியாவிற்குள் வருவதற்குக் காரணமே என் அக்கா சுதாதான். டிவி ஆங்கரிங், விளம்பரத்துறை என பிசியாக இருந்த எனக்கு வெண்ணிலா கபடிக்குழு பட வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து வேங்கையில் தனுஷ் தங்கையா நடித்தேன். மதுரை டூ தேனி படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்தபோது சீரியல் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஜீ தமிழ் சேனலில் மாமியார் தேவை தொடரில் அழகான மருமகள் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. எனக்கு ஜீன்ஸ், டிசர்ட் போட்டு நடிப்பதை விட புடவைதான் பிடித்துள்ளது. அதேபோன்ற நான் நடிக்கும் கதாபாத்திரங்களும் அமைவது என்னுடைய அதிர்ஷ்டம் என்றே கூறுவேன். சினிமாவில் நடித்துவிட்டு உடனே சீரியலுக்கு போனது ஏன் என்று கேட்கின்றனர். எனக்கு எல்லா கதாபாத்திரமும் நடிக்க வராது. குறிப்பா அயிட்டம் டான்ஸ் ஆட வராது. நான் நினைத்த கதாபாத்திரம் கிடைத்தால் சினிமாவில் நடிப்பேன். அதுவரை எனக்கு சீரியலில் கிடைத்து வரும் பெயர், புகழ் போதும், என்று கூறியிருக்கிறார்.