ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மீசை முளைக்காத வயசிலேயே நடிகரானவர் தனுஷ். ஆனால் இப்போது பலரும் பெருமையாக பேசும் நடிகராக வளர்ந்து நிற்கிறார். அதோடு, தமிழ் சினிமாவில் மட்டுமே தான் தேங்கி விடக்கூடாது என்று இப்போது ராஞ்சனா என்ற படத்தின் மூலம் இந்தியிலும் கால் பதித்துள்ளார். ஆனந்த் எல்.ராய் என்பவர் இயக்கும இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பதால் இந்தி சினிமா வட்டாரங்களில் ராஞ்சனா பேசப்படும் படமாகியிருக்கிறது.
அதோடு, தனது கேரியரில் ராஞ்சனா தன்னை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும் படமாக நினைக்கும் தனுஷ், தமிழிலும் அப்படத்தை அம்பிகாபதி என்று வெளியிடுவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். இப்படம் பற்றி அவர் கூறுகையில், நான் இதுவரை எத்தனையோ காதல் கதைகளில் நடித்திருக்கிறேன். ஆனால், இந்த படம் அம்பிகாபதி-அமராவதி காதலுக்கு இணையான உயிரோட்டமான காதல் கதை. ஒரு ஏழை பையனும், பணக்கார பொண்ணும் காதலிப்பது போன்ற வழக்கமான தொடக்கமாக இருந்தாலும், அதன்பிறகு வரும் காட்சிகள் மனதை தொடக்கூடியதாக இருக்கும்.
இந்தியில் நான் நடிக்கும் முதல் படம் பேசப்படக்கூடிய, இந்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கதையை தேர்வு செய்தேன் என்று சொல்லும் தனுஷ், இப்படம் தமிழ் ரசிகர்களின் மனதையும் கட்டாயம் டச் பண்ணும் என்கிறார்.