டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மரியான் படத்தில் நடித்துள்ள தனுஷ், இந்தியில் ஆனந்த் எல் ராய் என்பவரது இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்திலும் நடித்துள்ளார். இது தனுசுக்கு முதல் இந்தி படம். என்றபோதும், தனக்குத்தானே இந்தியில் டப்பிங் பேசியுள்ள அவர், அப்படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். அதோடு, தமிழிலும் அம்பிகாபதி என்ற பெயரில் அப்படத்தை வெளியிடுகிறார்.
மேலும், ஆசைக்கு ஒரு இந்திப்படத்தில் நடித்தேன் என்று ஒரு படத்தோடு விட்டுவிடாமல் தொடர்ந்து இந்தியில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார் தனுஷ். அதன்காரணமாக, ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராயிடம் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கதை கேட்டுள்ளார் அவர். இப்போது நடித்திருப்பது காதல் கதை என்றால், அடுத்து நடிக்கப்போவது சற்று ஆக்சன் கலந்த கதையாம்.
அப்படத்தை தயாரிப்பதற்கு அங்குள்ள படாதிபதிகள் முன்வராத நிலையில், தனுசும், இயக்குனர் ஆனந்த் எல் ராயும் இணைந்தே தயாரிக்கிறார்களாம். அதுமட்டுமின்றி, ராஞ்சனா படத்தைப்போன்றே தமிழுக்கும் அப்படத்தை ரிலீஸ் செய்யும் தனுஷ், இனி தான் நடிக்கும் தமிழ் படங்களையும் இந்தியிலும் வெளியிடும் முயற்சிகளை மேற்கொள்ளப்போகிறாராம்.