ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
"கோலிவுட், டோலிவுட்டிலேயே, நடித்துக் கொண்டிருந்தால், இந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக முடியாது என, நினைத்து, பாலிவுட்டில் கால் வைத்தார், இலியானா. முதல் படமான, "பர்பி அவரது திறமைக்கு தீனி போடும் வகையில் இருந்தாலும், அதைத் தொடர்ந்து, குறிப்பிட்டுக் கூறும்படியான வாய்ப்புகள், இலியானாவுக்கு கிடைக்கவில்லை.
குறிப்பாக, இந்தியில், "கான் நடிகர்களுடன் நடித்தால் தான், முன்னணி நடிகையாக முடியும் என்ற பேச்சு இருப்பதால், அவர்களுடன் ஜோடி போடுவதற்கு, தீவிரமாக முயற்சித்தார், இலியானா.
ஆனால், அவர்கள், இலியானாவை, கண்டு கொள்ளவே இல்லை. இதனால், "அவசரப்பட்டு, தப்பான களத்தில், கால் வைத்து விட்டோமோ என, புலம்பிக் கொண்டிருந்தவருக்கு, அக்ஷய் குமாருடன், "கப்பர் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து, ஷாகித் கபூருடன், "படா போஸ்டிங் நிகாலோ ஹீரோ என்ற படத்தில் நடிக்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்தபடியாக, சயீப் அலிகானுடன், ஒரு படத்தில் நடிக்கவும், முடிவாகியுள்ளது. வாய்ப்பு மீது, வாய்ப்பு குவிவதால், "கான் நடிகர்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவோடு, பாலிவுட்டில், நங்கூரம் பாய்ச்சி விட்டார், இலியானா.