பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலவி வரும் வறட்சியை சமாளிக்க 2500 குடிநீர் தொட்டிகளை வழங்கியுள்ளார் நடிகர் சல்மான் கான். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் சல்மான் கானும் ஒருவர். நடிகராக மட்டும் இல்லாமல் அவ்வப்போது நலதிட்ட உதவிகளையும் செய்து வருகிறார். தனது தொண்டு நிறுவனமான பீயிங் ஹியூமன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. மக்கள் குடிநீருக்கே கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வறட்சியை சமாளிக்க தனது தொண்டு நிறுவனம் மூலம் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2500 குடிநீர் தொட்டிகளை அமைக்க சல்மான் கான் ஏற்பாடு செய்துள்ளார். முதற்கட்டமாக மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் 750 தொட்டிகளும், உஸ்மானாபாத், ஜல்னா மாவட்டத்தில் தலா 500 தொட்டிகளும், அவுரங்காபாத் மற்றும் நான்டெட்டில் தலா 250 தொட்டிகளும் அமைக்கப்பட இருக்கிறது.