ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
நாட்டையே உலுக்கிய மருத்துவ மாணவி பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே டில்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இந்த சம்பவம் என்னை மிகப்பெரிய அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது என்று கூறியுள்ள இந்தி நடிகர் அமிதாப்பச்சன், இந்த மாதிரி செயல்களை செய்கிறவர்களை மிருகங்களைவிட கேவலமானவர்கள் என்றும் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ஏற்கனவே பாலியல் பலாத்காரம் நடந்த அதே டில்லியிலேயே மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியாக உள்ளது. அதுவும் இதுபற்றி அந்த 5 வயது குழந்தையின் பெற்றோர் புகார் அளித்த இரண்டு நாட்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறது காவல்துறை. நம்முடைய நாட்டில் ஏன் எதற்காக இப்படியெல்லாம் நடக்கிறது. இந்த குற்றவாளிகளை மக்கள் மன்றத்தில் முன் நிறுத்த வேண்டும்.
மேலும், இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளுக்கு ஜெயில் தண்டனை மட்டுமே போதாது, அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். காரணம், பெண்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்கிறவர்கள் தீவிரவாதிகளை விட கொடுமையானவர்கள் என்றும் கூறியுள்ளார் அமிதாப்.