பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவததில் 250 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை அளித்தது சுப்ரீம் கோர்ட். ஆனால் 18 மாதங்கள் சிறைதண்டனை அனுபவித்த சஞ்சய்தத், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். அதோடு, மீண்டும் சினிமாலும் நடிக்கத் தொடங்கினார்.
ஆனால், அதையடுத்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீதமுள்ள சிறைதண்டனையை சஞ்சய்தத் அனுபவித்தே ஆக வேண்டும் என்று சொல்லி அவரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதையடுத்து, கடந்த 17ந்தேதி ஆஜரான அவர், கைவசமுள்ள படங்களை முடித்து விட்டு வருவதாக 6 மாத காலம் அவகாசம் கேட்டார். ஆனால், நீதிபதியோ, சிறைதண்டனை கைதியான ஒருவர் எப்படி படங்களில் நடிக்கலாம் என்று கேள்வி கேட்டு, மனிதாபிமான அடிப்படையில சஞ்சய்தத்தை 4 வாரத்திற்குள் ஆஜராக உத்தரவிட்டார்.
இதனால் சஞ்சய்தத்தின் தண்டனை உறுதியாகி விட்டது. இந்நிலையில் அவர் நடித்து வந்த படங்களின் டப்பிங் பணிகளை சிலர் வேகவேகமாக முடித்து வருகின்றனர். ஆனபோதும், அந்த பணிகளை தனது வீட்டில் இருந்தபடியே செய்து வரும் சஞ்சய்தத், தனது குடும்பத்தாருடன் நாட்களை கழித்து வருகிறாராம். மனதுக்குள் கவலை இருந்தாலும், அதை காட்டிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருந்து வருகிறாராம்.